திங்கள், 1 ஆகஸ்ட், 2016

கதை - கவிதை - கடற்கரை

இலக்கிய உரையாடல்கள் மீண்டும் மீண்டும் குளிரூட்டப்பட்ட அல்லது குளிரூட்டப்படாத அறைகளுக்குள் விவாதிக்கப்படுகின்றன. அந்த அறையைத் தாண்டி கலை இலக்கிய உரையாடல்கள் பொதுவெளியில் மக்கள் கூடும் இடங்களை நோக்கி இடம்பெயர வேண்டும் என்பதைத் தொடர்ந்து நண்பர்களோடு பேசி வருகிறேன். எனது கருத்தினைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது சனிக்கிழமை மாலை மெரினா கடற்கரை மணலில் நிகழ்ந்த நான்கு நூல்கள் அறிமுகக் கூட்டம்.
மேடை, மைக், பேசுபவர், பார்வையாளர்கள் என்கிற அமைப்பு, நான் சரியா தான் பேசுறேனா என்கிற சின்ன பதற்றத்தை உண்டாக்கிக் கொண்டே இருக்கும்.
ஆனால் கடற்கரை மணலில், மக்கள் பார்வையில் படும்படியாக வட்டமாக அமர்ந்து வாசித்த நூல் குறித்து நண்பர்களோடு பகிர்ந்து கொள்வது போல ஒரு நிகழ்வை ஒருங்கமைத்த கார்த்திக் புகழேந்தி மற்றும் அகரமுதல்வனுக்கு அன்பும் பிரியங்களும். மிக இயல்பாக உரையாடலை நிகழ்த்த முடிந்த நிறைவையும் மகிழ்வையும் தந்தது அந்த நிகழ்வு.
லதா அருணாச்சலம், கணேஷ் பாலா, விஜய் மகேந்திரன், தேவர் அப்பா என அன்பின் இனிய நண்பர்கள் பலரைச் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி.
இலக்கிய உரையாடலில் பங்கெடுக்க மேகம் கூட இறங்கி வந்தது மழையாக.
கடற்கரை காற்றும், மணலும் கதையும் கவிதையும் நண்பர்களுமாக ஒரு நாளைக் கொண்டாடுவது வரமன்றி வேறென்ன?

##அரசனின் இண்டமுள்ளு சிறுகதைத் தொகுப்பு குறித்த பதிவு விரைவில்...

1 கருத்து: