திங்கள், 8 பிப்ரவரி, 2016

பறவையாதல் - மனுஷி

என்னை முதன் முதலாக
நீ முத்தமிடும் கணம்
வெளியே பனி பொழிந்து கொண்டிருக்கும்.
உன் காதலால் ஒளிவீசும்
எனது முகத்தை
உனதிரு கைகளால்
பற்றிக் கொண்டிருபாய்.
உன் தோள் அளவேயான என் முகத்தருகில்
குனிந்து நீ
முத்தமிடுவாய்
என் கைகளை
பறவையின் சிறகைப் போல்
சுவரில் சாற்றி.
உன் இதழைப் பருகும்போது
நான்
பறவையாகிப் பறந்து கொண்டிருப்பேன்.

2 கருத்துகள்: