வெள்ளி, 4 செப்டம்பர், 2015

நீ வருவாய் என


பொய்த்துப் போன கனவுக்குப் பிறகும்
கதவைத் திறந்தே வைத்திருக்கிறேன்
உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் ஏதோவொரு அதிகாலையில்
சிறு அணைப்பினால்
உறக்கம் கலைப்பாய் என.
வாசலருகே கேட்கும் காலடி சப்தங்களைக் கேட்கையிலெல்லாம்
நீ தான் என எட்டிப் பார்க்கிறேன்.
இரும்புக்கதவு தாழ் நீக்கப்படும்
ஓசை கேட்கும்போதெல்லாம்
நீயாக இருக்க வேண்டுமென
ஏங்குகிறேன்
நீ
அன்பொழுக முத்தமிட்ட கணங்களைச சுமந்தபடி.
அப்படியொன்றும்
வெகுதூரம் சென்றுவிடவில்லை
நீ.
இங்குதான் இருக்கிறாய்.
என் கண்ணீரின் வெம்மை தணிவதற்குள்
காதலோடு வந்து சேர்வாய்.
இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.
இது சிறு பிரிவு தான்.
மிகச்சிறிய பிரிவு தான்.
ஏனெனில்
அன்றொரு நாள்
பௌர்ணமி இரவில்
வங்கக் கடலோரத்தில்
நெற்றியில் முத்தமிட்டு
சொன்னாய்
எப்போதும் பிரிவதில்லை எனவும்
காதலால் இதயம் நிறைப்பாய் எனவும்.
ஒவ்வொரு பௌர்ணமியிலும்
அந்த முத்தம் ஒளிர்கிறது
வானமெங்கும்.
இப்போதும் காத்திருக்கிறேன்.
இது சிறு பிரிவு தான்.

நன்றி : செம்மலர் - செப்டம்பர் 2015

4 கருத்துகள்:

  1. again I got call from 9585580617 . and yesterday got call from 7094545646.. unna avan wife nu call panni pesuran.. paarthuko.. yenna nadakkuthu? yennama eppadi pannuringalema...?? anyway sorry for disturb.. take care.. good bye...madam..

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு வரியும் பிரிவின் வலியை உணர்த்துகின்றது. வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. அந்த பௌர்ணமி முத்தத்தில் தான் பிரிவின் வலி பிடறி விரித்து ஆடுகிறது...

    பதிலளிநீக்கு