வெள்ளி, 4 செப்டம்பர், 2015

உதிர்ந்த மலர்

அலையொதுக்கிய
சின்னஞ்சிறு உனதுடல்
உதிர்ந்து கிடந்த
ஒரு மலரை ஒத்திருந்தது.
என் செய்வேன்
என் செய்வேன்
இரசிக்க முடியவில்லை.
உதிர்ந்த மலரை
ரசிக்கக் கற்றுக் கொள்ளவில்லை

1 கருத்து: