திங்கள், 25 ஜனவரி, 2016

நுரைத்துப் பொங்கும் கோப்பையிலிருந்து
வழிகிறது என் கண்ணீர்.
புத்தனின் கண்களால்
சலனமற்றுப்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
உன் மௌனம் 
போதையைக் கிளர்த்த 
மிதமிஞ்சிய சோகத்தோடு
புல்லாங்குழல் இசைத்தபடி
நடந்து போகிறாள் யசோதை
யாருமற்ற வீதி வழியாக.
அவள் பாடுவது என் பாடலை.
அவள் இசைப்பது எனது அழுகையை.
அவள் இறுதியாக இளைப்பாறுவது
எனது கல்லறையில்.
-- மனுஷி

1 கருத்து: