படுக்கையறை சுவரில்
கீறி வைத்துவிட்டுப் போன
நிர்வாணப் பெண்ணுக்கு
ஆடை வரைந்து விட்டேன்
நீ அருந்திவிட்டுப் போன
மதுபாட்டில்களையும்
புகைத்து மிச்சம் விட்டுப் போன
சிகரெட் துண்டுகளையும்
சுடுகாட்டின் அருகில் போய்
புதைத்து விட்டேன்.
படுக்கையறையின் நினைவுகளையெல்லாம்
அழித்துத் துடைத்துச்
சுத்தம் செய்து விட்டேன்.
இன்னும் சில நாட்கள்
சில மாதங்கள்
சில வருடங்கள் கூட
அழுது அழுது
மனதிலிருந்தும் உன்னை வெளியேற்றி விடுவேன்.
இன்னமும் மௌனமாய்
புன்னகைத்துக் கொண்டிருக்கிறாய்.
என் காதலை வேண்டி வரும் நாளில்
என் அறையில்
உன் நினைவுகள் இருக்கப் போவதில்லை.
முகம் செத்துத் திரும்பிப் போவாய்.
Maranthacha? Ennum nabagam eruka? Or poyiducha?
பதிலளிநீக்கு